எமது இணையம் தற்போது சீரமைப்பு செய்யப்படுகிறது .சிரமத்துக்கு வருந்துகிறோம். உங்கள் தேடலுக்கு திறந்தே உள்ளது

புதன், 10 மார்ச், 2010

போராட்ட வரலாறு8

Wednesday 10th March
Home
About
முன்னயவை
RSS feed

Home » 70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்
70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

தமிழ்மணம் பரிந்துரை : 1/1

Pathivu Toolbar ©2010thamizmanam.com

ஐயர் அவர்களின் வரலாறு ஈழப்போராட்டத்தின் வரலாற்றின் பிரதான பகுதி! ஈழப் போராட்டத்தின் பரிணாமத்தை அவரின் சாட்சியிலிருந்தே புரிந்துகொள்ளலாம். சமூக வரம்பையும், கொலைக் கரங்களையும் இன்னும் இன்னொரன்ன தடைகளையும் மீறி இறுதியில் இடதுசாரியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டவர். பிரபாகரனோடு இணைந்து ஈழப் போராட்டத்தை ஆரம்ப்பித்தவர். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT), தீப்பொறி என்று தனது சரணடைவிற்கும் விட்டுக்கொடுப்பிற்கும் அப்பாலான போராட்டத்தை இறுதிவரை நடத்தியவர். ஐயர் கூறும் உண்மைகள் வெளிச்சத்தில் கடந்த காலத்தின் ஒரு பகுதி குறித்த புரிதலைப் வந்தடையலாம் என நம்புவோம்.
நடந்தவை எல்லாமே ஒரு கனவு போல் இன்றும் மறுபடி மறுபடி எனது நினைவுகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. வன்னி குறு நிலப்பரப்பில் ஆயரமாயிரமாய் மக்கள் பலியெடுக்கப்பட்ட போதெல்லாம், செய்வதறியாது திகைத்துப் போனவர்களுள், உணர்வின்றி, உணவின்றி உறக்கம் தொலைத்து அதிர்ச்சியடைந்த ஆயியமாயிரம் மனிதர்களுள் நானும் இன்னொருவன். தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரனுடன் முதன் முதலில் உருவாக்கிக் கொண்ட்ட அமைப்பின் மத்திய குழுவில் நானும் ஒருவன் என்ற வகையில் இழப்புக்கள் எல்லாம் இன்னும் இறுக்கமாய் எனது இதயத்தை அறைந்தது. 1970 ஆம் ஆண்டு சிறீமாவோ பண்டாரநாயக்கவின் சுதந்திரக்கட்சியின் தலைமியிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வருகிறது. என்.எம்.பெரேரா என்ற ரொஸ்கிய வாத இடதுசாரி நிதியமைச்சராக நியமிக்கப்படுகிறார்.
தமிழகத்திலிருந்து வருகின்ற பெரியாரின் எழுத்துக்களைப் படித்ததில் எனக்கு நாத்திகவாததில் நாட்டம் ஏற்படுகிறது. பிராமணக் குடும்பத்தில் பிறந்த எனக்கு எனது சுற்றத்திலிருந்து எதிர்ப்புக்கள் வருகின்றன.
எனது இருபதுகளில் ஏற்படுகின்ற இளைஞனுக்கே உரித்தான நாட்டங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு புரட்சி போராட்டம் என்பன குறித்துச் சிந்திக்கிறோம். இடது சாரியம் குறித்தும் மார்க்சியம் குறித்தும் அறிந்திராத நாம் தமிழ்ப் பேசும் மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டிருந்த அடக்குமுறைகளை எதிர்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது.
இந்த நிலையில் 1970 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, சிறீ லன்கா சுதந்திரக் கட்சி ஆகின இணைந்து இலங்கையில் ஒர் அரசை அமைத்துக் கொள்கின்றன. 1972 ஆம் ஆண்டு தமிழ் மாணவர்களின் பல்கலைக் கழக அனுமதியை கட்டுப்படுத்தும் வகையில் இனவாரியான தரப்படுத்தல் சட்டமூலத்திற்கான மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுகிறது. இது 1973 இல் அமுலுக்கு வருகிறது. இதே வேளை 1971 இல் பௌத்த மதம் தேசிய மதமாகப் பிரகடனப் படுத்தப்படுகிறது. இதே வேளை 1972 இல் இலங்கை குடியரசாகவும் பிரகடனப்படுத்தப் படுகிறது. இந்தக் குடியரசில் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்களுக்கு எந்த உத்தரவாதமும் வழங்கப்படவிலை என்பது தவிர இனவாரியான தரப்படுத்தல் என்பது திறமையுள்ள தமிழ் மாணவர்கள் கூட ப்ல்கலைக் கழகக் கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கின்றது. இதற்கு முன்னதாக 1958 இல் தமிழ் பேசும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களின் வடு இன்னமும் ஆறியிருக்கவில்லை.
இதனால் விரக்தியுற்ற தமிழ் இளைஞர்கள் தமிழ் மாணர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கின்றனர். சத்தியசீலன், சிவகுமாரன் போன்றோர் முன்னின்று உருவாக்கிய இந்த அமைப்பில் நானும் எனது ஊரைச் சேர்ந்தவர்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம். பல ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபடுகிறோம். இதே வேளை 1972 இல் இலங்கை குடியரசு நாடாகிய போது நிகழ்ந்த எதிர்ப்புப் போராட்டங்களில் நானும் குலம் என்ற எனது நண்படும் தீவிரமாகப் பங்கெடுக்கிறோம். பெரும்பாலான இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழரசுக் கட்சியினால் ஒழுங்கு செய்யப்படுகின்றன. சத்தியாக்கிரகப் போராட்டங்கள், ஊர்வலங்கள், கறுப்புக்கொடிப் போராட்டங்கள் எனப் பல போராட்டங்களில் தீவிர பங்காற்றுகிறோம். இவ்வேளையில் தமிழரசுக் கட்சிக்கும் மாணவர் பேரவைக்கும் அடிப்படையிலிருந்த முரண்பாடென்பது, செயற்பாட்டுத்தளத்திலேயே அமைந்திருந்தது, மாணவர் பேரவை கூட்டணியின் செயற்பாடு தீவிரமற்றதாக இருந்ததாகக் குற்றம் கூறினர்.
இந்த நேரத்தில் நாமெல்லாம் தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். எமக்குத் தெரிய சண்முகதாசனின் மாவோயிசக் கட்சி போன்றன தீவிர இடதுசாரிக் கருத்துக்களுடன் வெளிவந்திருந்தாலும், தேசியப் பிரச்சனையில் அவர்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை. தமிழ் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதெல்லாம் அண்ணதுரை, கருணாநிதி, தமிழரசுக்கட்சி என்பன என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை.
குடியரசு தின எதிர்ப்புப் போராட்ட நிகழ்வுகளை ஒட்டி சுமார் 42 பேர் சிறைப்படுத்தப்படுகின்றனர். சேனாதிராஜா, காசியானந்தன் வண்ணையானந்தன் உள்பட பலர் இலங்கை அரசால் சிறைப் பிடிக்கப்படுகின்றனர். அத்ற்கு முன்னதாக அரச சார்பானவர்களின் வீடுகள் முன்னால் குண்டெறிதல், பஸ் எரிப்பு, அரச வாகன எரிப்பு போன்ற சிறிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. இது தவிர குடியரசு தினத்தன்று தொடர்ச்சியாக மக்கள் ஆதரவுடனான ஹர்த்தால் கடையடைப்பு என்பன தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெறுகின்றது.
இதே வேளை சிவகுமாரன் சோமவீர சந்திரசிறீ என்ற உதவிப் பொலிஸ் அத்தியட்சகரை அவரின் தீவிர தமிழ் விரோத நடவடிக்கைகளுக்காக கொலை செய்வதற்கு பல தடவை முயற்சிக்கிறார். தவிர யாழ்ப்பாண முதல்வராக இருந்த சிறீ லங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தரான துரையப்பாவைக் கொலைசெய்ய இரண்டு மூன்று தடைவைகள் முயற்சிசெய்கிறார். இவையெல்லாம் தோல்வியிலேயே முடிவடைகின்றன.
இவேளையிலெல்லாம் நான் ஒரு ஆதரவாளர் மட்டத்திலான செயற்பாடுகளையே மேற்கொண்டேன்.
அதே வேளை வட்டுக்கோட்டை எம்.பீ ஆகவிருந்த அரச ஆதரவாளரான தியாகராஜா என்பவரைக் கொலை செய்ய முயற்சித்த ஜீவராஜா என்பவர் தீவிரமாகத் தேடப்படுகிறார். அவர் எமது ஊரான புன்னாலைக் கட்டுவனுக்குத் தலைமறைவாகும் நோக்கத்தோடு வருகிறார். அப்போது நானும் குலம் என்பவரும் அவருக்கு பாதுகாப்பு ஏற்படுகளைச் மேற்கொண்டு தலைமறைவாக வாழ்வதற்கு உதவிபுரிகின்றோம். கிராமத்திற்குக் கிராமம் பொலிசாரும், உளவாளிகளும் தமிழ் உணர்வாளர்களை வேட்டையாடித்திரிந்த அந்தக் காலகடம் எதிர்ப்புணர்வும், வீரமும் நிறைந்த உற்சாகமான வாழ்க்கைப்பகுதி. அவரூடாக பிரான்சிஸ் அல்லது கி.பி.அரவிந்தனும் எமக்கு அறிமுகமாகிறார். ஜீவராஜா, பிரான்சிஸ், சிவகுமார், மகேந்திரன் ஆகியோர் எமது இடத்திலிருந்தே கோப்பாய் வங்கிக் கொள்ளையை மேற்கொள்ளப் போகிறார்கள்.
இந்தக் கொள்ளையின் போது பொலீசாருடன் ஏற்பட்ட போராட்டத்தில் சிவகுமாரன் சயனைட் வில்லைகளை அருந்தித் தற்கொலை செய்துகொள்கிறார். ஜீவராஜா கைது செய்யப்படுகிறார். பிரான்சிஸ் தப்பிவந்து விடுகிறார்.
இதே வேளை செட்டி, பத்மநாதன், சிவராசா, ரத்னகுமார் ஆகிய நால்வரும் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து தப்பிவருகிறார்கள். அந்த நேரத்தில் இலங்கை அரச அமைச்சர்களை வரவேற்று அழைத்து வந்த அருளம்பலம் என்பவரின் ஆதரவாளரான குமாரகுலசிங்கம் என்பவரைக் கொலைசெய்ததன் அடிப்படையிலேயே செட்டி உட்பட்ட இவர்கள் கைது செய்யப்பட்டனர். செட்டியை பொறுத்தவரை எதிர்ப்புப் போராட்ட, வன்முறைப் போராட்ட உணர்வுகளுக்கு அப்பால் தனிப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபாடுள்ளவராகவே காணப்பட்டார். பல தனிப்பட்ட திருட்டுக் குற்றச் செயல்களுக்காகத் தேடப்பட்டவர். அரசியலுக்கும் செட்டிக்கும் ஆழமான தொடர்புகள் ஏதும் இருந்ததில்லை. அவர் சிறுவயதாக இருக்கும் போதே சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டவர். அரசிய தொடர்பு என்பது வெறும் தற்செயல் நிகழ்வே.
செட்டியைப் பற்றை எமக்கு அப்போது பெருதாகத் தெரிந்திருக்கவில்லை ஆனால் அவர் எம்மைப் பற்றி அறிந்து கொண்டு எமது ஊருக்கு எம்மைத் தேடி வருகிறார். எமது ஆதரவைக் கோருகிறார். அப்போது செட்டியும் ரத்னகுமாரும் அங்கு வருகின்றனர்.
அங்கு வந்தவர்கள் இலங்கை அரச படைகளுக்கு எதிராகப் போராடுவதற்குத் துப்பாக்கி தேவை என்றும் அது சாத்தியமாவதற்கு ஆயுதங்கள் தேவை என்றும் கூறுகின்றனர். செட்டி அந்த நோக்கத்திற்காக தெல்லிப்பளை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திலிருந்து ஒரு லட்ச ரூபாய்களைக் கொள்ளையிடுகிறார். அந்தக் கொள்ளைப் பணத்துடன் படகு மூலமாக அவர் இந்தியாவிற்குச் செல்கிறார்.
இதே வேளை பிரபாகரனின் சொந்த இடமான வல்வெட்டித்துறை இந்திய இலங்கைக்கு இடையிலான கடத்தல் வியாபாரத்தின் பிரதான மையமாக இருந்தது. இதன் காரணமாகவும் தமிழரசுக் கட்சி மற்றும் சுயாட்சிக் கழக நவரத்தினம் போன்றோரின் செல்வாக்குக் காரணமாகவும் இயல்பாகவே இப்பிரதேசம் அரச எதிர்ப்புணர்வுடையதாக அமைந்திருந்தது. இங்கு கடத்ததல் தொழிலில் முன்னணியிலிருந்த தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் மாணவர் பேரவையின் ஆதரவாளர்களாகச் செயற்பட்டனர். இவர்கள் கடத்தலை முழு நேரத் தொழிலாகக் கொண்டிருந்தாலும், அரசிற்கு எதிரான அரசியற் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்தனர்.
சிறுவனாக இருந்த பிரபாகரன் குடியரசு தினத்தை ஒட்டி ஒரு அரச பேரூர்ந்து ஒன்றை எரிப்பதற்கு முயற்சித்துத் தப்பித்ததால் அவரும் தேடப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். அப்போதெல்லாம் பிரபாகரனுக்கு பதினாறு அல்லது பதினேழு வயது தான் நிரம்பியிருக்கும். பிரபாகரன் கடத்தல் தொழிலில் ஈடுபடவில்லையாயினும் அரச எதிர்ப்பு விவகாரங்களில் குட்டிமணி, தங்கத்துரையுடன் தொடர்புகளைப் பேணிக்கொள்கிறார்.குறிப்பாக தமிழ் நாட்டிற்கான போக்குவரத்து வசதிகளுக்காக பிரபாகரன் மட்டுமல்ல அனைத்து அரச எதிர்ப்பாளர்களும் குட்டிமணி, தங்கத்துரை போன்றோரைச் சார்ந்திருக்கவேண்டிய நிலையே ஏற்பட்டது.
தேடப்படும் நிலையில் குட்டிமணியைச் சந்தித்து அவருடன் பிரபாகரன் தமிழ் நாட்டிற்குத் தப்பிவருகிறார். இதேவேளை எம்முடன் தங்கியிருந்த செட்டியும் இந்தியா செல்கிறார். அவ்வேளையில் செட்டி பிரபாகரனைச் சந்திக்கிறார்.பிரபாகரனைப் பொறுத்தவரை முழுநேரமாக அரச எதிர்ப்பு வன்முறை அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை குட்டிமணி, தங்கத்துரையிடம் முன்வைக்க அவர்கள் கடத்தல் தொழிலைத் தொடர்ந்தவண்ணமிருந்தனர். இவ்வேளையில் செட்டியும் ஆயுதம் வாங்கி இலங்கை அரசிற்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். அவ்வேளையில் தான் பிரபாகரன் செட்டியுடன் இணைந்து செயற்படும் முடிபிற்கு வருகிறார். சுமார் பதினெட்டுவயதாகும் போது தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரன் இம்முடிபை எடுக்கிறார்.
அவ்வேளையில் உலகத் தமிழர் பேரவையைச் சார்ந்த ஜனார்தனனின் தொடர்பு பிரபாகரனிற்கு ஏற்படுகிறது.
இதே வேளை தமிழ் நாட்டில் தங்கியிருந்த தமிழரசுக் கட்சியைச் சார்ந்த ராஜரட்ணம் என்பவரின் தொடர்பு பிரபாகரனுக்கு ஏற்படுகிறது. குடியரசு தின எதிர்ப்புப் போராட்டங்களின் போதான வன்முறை நிகழ்வுகளில் தேடப்பட்டவர்களுள் ராஜரட்ணமும் ஒருவர். அவர்தான் பிரபாகரனுக்கு கரிகால் சோழன், புலிக் கொடி போன்ற சரித்திர நிகழ்வுகளைப் போதிக்கிறார். அவர் தான் இந்த அடிப்படைகளிலிருந்து தமிழ் புதிய புலிகள் என்ற பெயரை முன்வைத்து அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்குகிறார். பிரபாகரன் இந்த ஆலோசனைகளால் ஆட்கொள்ளப்படுகிறார்.
இதன் பின்னர் பிரபாகரன் இலங்கைக்கு செட்டியுடன் திரும்பவந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானிக்கிறார். இதனை தங்கத்துரை குட்டிமணியிடம் கூறியபோது, அவர்கள் செட்டி கொள்ளைக்காரன், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் அவருடன் தொடர்புகளை வைத்திருக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். ஆனால், பிரபாகரனோ அவர்கள் தொடர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபடுவதற்காகவே இவ்வாறு நியாயப்படுத்துகின்றனர் என்று கூறி செட்டியுடன் நாடு திரும்புகிறார். இலங்கைக்கு வந்த பிரபாகரன் சிலரைச் சேர்த்துக்கொண்டு யாழ்ப்பாண மேயராகவிருந்த துரையப்பாவைக் கொலைசெய்யவேண்டும் என்ற நோக்கத்தில் செயற்படுகிறார்.அவ்வேளையில் தான் இன்பம், செல்வம் பொன்ற சில இளஞர்களைப் பிரபாகரன் இணைத்துக்கொள்கிறார். இன்பம் செல்வம் இருவரும் பின்னர் இராணுவத்தினரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்கள்.
இவ்வாறு பிரபாகரன் துரையப்பாவை கொலைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, செட்டி பொலீசாரால் கைது செய்யப்படுகிறார். அவர் வைத்திருந்த கொள்ளைப் பணத்தில் கார் ஒன்றை வாங்கி தனது ஊரினுள்ளேயே உலாவித் திரிந்ததால் பொலீசாரின் கண்ணுக்குள் அகப்பட்டு விடுகிறார், இதனாலேயே கைதும் செய்யப்படுகிறார்.
இதன் பின்னர் பிரபாகரன் தனக்குத் தெரிந்தவர்களைச் சேர்த்துக்கொண்டு துரையப்பாவைக் கொலைசெய்யும் முயற்சியில் வெற்றி பெறுகிறார். இதில் ஈடுபட்டவர்கள், பிரபாகரன், கிருபாகரன், கலாவதி, நற்குணராஜா என்ற நால்வருமே. அவ்வேளையில் தமிழரசுக்கட்சியின் உணர்ச்சிகரப் பேச்சுகளால் உந்தப்பட்டுப் பல இளைஞர்கள் துரையப்பாவைக் கொலைசெய்ய வேண்டும் என்ற முடிபிற்கு வந்திருந்தனர். துரையப்பாவைப் பொறுத்தவரை உரிமைகளை விட அபிவிருத்தியே முதன்மையானது என்ற கருத்தைக் கொண்டிருந்தவர். இதனால் இலங்கை அரசின் அடக்குமுறைகளைக் கண்டுகொண்டதில்லை. இன்றைய டக்ளஸ் தேவானந்தாவின் அதேவகையான நிலைப்பாட்டை அன்றே கொண்டிருந்தவர். இந்த அடிப்படையில் பொலீசாரின் அடக்குமுறைகளுக்கும் துணைபோனவர். பல்வேறுபட்ட இளைஞர்கள் இந்த முயற்சியில் தன்னிச்சையாக ஈடுபடலாயினர். இப்போதெல்லாம் இக்கொலைகளை நாம் நியாயப் படுத்துவதென்பது ஆயுதக் கலாச்சரத்தை அறிமுகப்படுத்துவதாகவே அமையும் ஆனால் அன்றோ நிலைமை மாறுபட்டதாக இருந்தது. சிறீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த, மிகுந்த பாதுகாப்புடன் வாழ்ந்த துரையப்பாவைக் கொலைசெய்தல் என்பது ஒரு சமூக அங்கீகாரமாகவே கருதப்பட்டது.
பல இளைஞர்கள் இந்த முயற்சியில் குழுக்களாகவும் தனியாகவும் ஈடுபட்டிருந்த போதும் கொலையை வெற்றிகரமாக நிறைவேற்றியவர் இவர்கள் நால்வரும் தான். இவர்கள் நால்வருமே 20 இற்கு உட்பட்ட வயதுடையவர்களாகவே இருந்தனர்.
ஆனால் இக்கொலையை நிறைவேற்றியவர்கள் யார் என்பது வெளியுலகிற்கும் பொலீசாருக்கும் தெரியாத இரகசியமாகவே இருந்தது. பின்னதாக கலாபதியையும் கிருபாகரனையும் பொலீசார் கைதுசெய்துவிட்டனர். இவ்வேளையில் பிரபாகரன் தனது வீட்டில் தங்கியிராததால் தப்பிக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். இவ்வேளையிலேயே இதில் தொடர்பற்ற பலர் கைது செய்யப்படுகின்றனர், குறிப்பாக சந்ததியார் போன்ற இளைஞர் பேரவை முக்கியஸ்தர்களும் கைதுசெய்யப்படுகின்றனர்.
இந்த வேளையில் பிரபாகரனுடன் சார்ந்த அனைவரும் கைதுசெய்யப்படுகின்றனர். பழைய தொடர்புகள் அனைத்தையும் இழந்த தேடப்படும் நபராகவே காணப்படுகிறார்.
இவ்வேளையில் தான் எம்மைப்பற்றி அறிந்து கொண்ட பிரபாகரன் எம்மைத் தேடி எமது ஊருக்கு வருகிறார். முதலில் எமது ஊரைச் சேர்ந்த ராகவனைச் சந்திக்கிறார். அவரின் ஊடாக என்னையும் குலம் என்பவரையும் தொடர்புகொள்ள முயற்சிக்கிறார். செட்டி தான் எமது தொடர்புகள் குறித்துத் தெரியப்படுத்தியதாகவும் கூறுகிறார். இவ்வேளையில் செட்டி தொடர்பாக நாம் முழுமையாக அறிந்திருந்தோம். இதனால் செட்டியின் தொடர்பாளராகப் பிரபாகரன் அறிமுகமானதால் நாம் அவரைது தொடர்புகளை நிராகரித்திருந்தோம்.
அந்த வேளையில் பிரபாகரனுக்கு உணவிற்கும் தங்குவதற்கும் எந்த வசதியுமற்ற நிலையிலேயே காணப்பட்டார். சில நாட்களின் பின்னர் மறுபடி ராகவனுடன் வந்த பிரபாகரன், எம்முடன் பேசவிரும்புவதாகத் தெரிவித்தார்.
அப்போது தான் முதன் முதலாகப் பிரபாகரனைச் சந்திக்கிறேன். இங்கிருந்துதான் பிரபாகரனுடனான வரலாறு ஆரம்பமாகிறது.பிரபாகரனைச் சந்தித்த போது, செட்டியிடம் சில பலவீனங்கள் இருந்தாலும் அவர் துணிச்சல் மிக்கவரும், வீரமுள்ளவரும் என்பதால் அவருடன் இணைந்து செயற்பட்டதாகக் கூறுகிறார். பலவீனங்களை நிவர்த்திசெய்துகொண்டால் செட்டியைத் தான் தனது தலைவனாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறுகிறார். நாமும் அவருடன் இணைந்து செயற்பட ஆரம்பிக்கிறோம். துரையப்பா கொலையில் தொடர்புடைய நால்வரில் கலாவதியும் கிருபாகரனும் கைதுசெய்யப்பட பற்குணம் என்பவர் தமிழ் நாட்டிற்குத் தப்பிச்சென்று விடுகிறார். பிரபாகரன் மட்டுமே இலங்கையில் இருக்கிறார்.
அவ்வேளையில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன் காண்டீபன் இந்தியாவிலிருந்து மயிலிட்டி என்ற இடத்திற்கு வருகிறார். இவரும் தேடப்படுபவராக இருந்ததால் இந்தியாவில் தலைமறைவாகியிருந்தார்.
அவ்வேளையில் இளைஞர் பேரவையில் ஆதரவளாரான தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர் குமரகுரு என்பவர் பிரபாகரனை இந்தியாவிற்கு அனுப்புவதாக உறுதியளித்திருந்தார்.ஆனால் காண்டீபன் இலங்கைக்கு வந்ததும், பிரபாகரனை இந்தியவிற்கு அனுப்புவதற்குப் பதிலாக காண்டீபனை இந்தியாவிற்கு அனுப்பிவைக்கிறார். கொலையில் நேரடியாக ஈடுபட்ட தன்னை அனுப்பாமல் காண்டீபனை அனுப்பிய இந்த நடவடிக்கை காரணமாக பிரபாகரன் கூட்டணியினர் மீது வெறுப்படைந்து மறுபடி எம்மிடம் வருகிறார். அதன் பின்னர் தான் இந்தியாவிற்கு இனித் தலைமறைவாகப் போவதில்லை என முடிபிற்கு வந்து எம்முடன் இணைந்து அரசியல் வேலைகளில் ஈடுபடப்போவதாகக் கூறுகிறார். பிரபாகரனுக்குத் தெரிந்தவர்கள் சிலர், நான், குலம், ராகவன், அனைவரும் இணைந்து சிலரது ஆதரவுடன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறோம். பிரபாகரன், செட்டியின் உறவினரான செல்லக்கிளி, குமரச்செல்வம் ஆகியோர் நேரடியாக வங்கிக்குள் சென்று கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
அப்போது கிடைத்த பணம் எனது பொறுப்பிலேயே வைக்கப்பட்டிருந்தது. அதில் ஈடுபட்ட இருவர் தமக்குக் குடும்பச் சுமை இருப்பதாகவும் தமக்கு பண உதவி செய்தாலே முழு நேரமாக இயங்க முடியும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அவர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டன. அவ்வேளையில் நான், ராகவன் தவிர்ந்த ஏனையோருக்கு கடவுள் பற்று இருந்தது. குறிப்பாகப் பிரபாகரன் மிகுந்த கடவுள் பக்தி உடையவராகவும், சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டவராகவும் காணப்பட்டார். இதனால் பிரபாகரனின் முன்மொழிவின் பேரில் செல்லச் சன்னதி கோவிலில், வங்கிக்கொள்ளைப் பணத்தில் ஒரு அன்னதானம் வழங்கப்பட்டது. என் போன்றவர்களுக்கு மார்க்சிய தத்துவங்கள் குறித்துத் தெரிந்திராவிட்டாலும், கடவுள் மறுப்பு என்பது பெரியாரியக் கொள்கைகளூடான தாக்கத்தினால் ஏற்பட்டிருந்தது. இதனால் இந்தச் செல்லச்சனதிக் கோவில் நிகழ்வை முற்றாக மறுத்திருந்தேன். குலம், நான் , ராகவன் மூவரும் தான் இதை முழுமையாக எதிர்த்தோம்.
வேடிக்கை என்னவென்றால் இவ்வேளையிலும் கூட நான் தொழில் ரீதியாக கோவிலில் பிராமணராக இருந்தேன் என்பதுதான்.
எது எவ்வாறாயினும் பிரபாகரன் அப்போது எமக்கெல்லாம் ஒரு ஹீரோ போலத்தான். துரையப்பா கொலையை வெற்றிகரமாக முடித்தவர் என்பது தான் இதன் அடிப்படைக் காரணம்.
ராகவன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் ஈடுபடவில்லை. இது கூட ஒரு கடவுள் மறுப்பின் காரணமாகத் தான். வங்கிக் கொள்ளைக்குத் தேவையான துப்பாக்கி ரவைகளை வாங்குவதற்காக பிரபாகரன் ராகவனை வேறொரு இடத்திற்கு அனுப்பிவைக்கிறார். அவ்வேளையில் அங்கு கோவில் திருவிழா நடை பெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஒருவர் ராகவன் கடவுள் இல்லை என்று சொல்வதால் அவரைத் தீக்குளித்துக் காட்டுமாறு கேட்டிருக்கிறார். அவ்வாறு நடந்த வாக்குவாததிலெல்லாம் ஈடுபட்டதால் பிரபாகரன் ஆத்திரமடைந்திருக்கிறார். போன வேலையில் ஈடுபடாமல் வேறு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ராகவனை சில காலம் நீக்கி வைத்திருந்தார். இதனாலேதான் ராகவன் புத்தூர் வங்கிக் கொள்ளையில் கூடப் பங்குபற்றவில்லை. ஒரு சில நாட்களுக்கே விலகியிருந்த ராகவன் மீண்டும் இணைந்து கொள்கிறார்.
இதன் பின்னர் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிபிற்கு வருகிறோம். புளியங்குளம் காட்டில் ஒரு இடத்தையும் தேர்ந்து கொள்கிறோம். அங்குதான் எமது பயிற்சிகளை ஆரம்பிக்கிறோம். இந்த முகாமில் முழு நேரமாக பங்கெடுத்துக் கொண்டவர்கள் நானும் பிரபாகரனும் மட்டும்தான். மற்றவர்கள் பகுதி நேரமாக அங்கு பயிற்சிக்கு வந்து போவார்கள்.அவ்வேளையில் எமது குழுவிற்கான மத்திய நிர்வகக் குழு ஒன்றை அமைத்துக் கொள்கிறோம். அக்குழுவில் நான், பிரபாகரன், குமரச்செல்வம், பட்டண்ணா, சின்னராசு என்கிற உதய குமார் என்ற ஐந்து பேரும் அங்கம் வகிக்கிறோம். அப்போது பருமட்டான திட்டம் ஒன்றினை முன்வைக்கிறோம்.
1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.
2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.
3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.
4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
இவையெல்லாம் அன்று எமக்கு நியாயமான சுலோகங்களாகத் தான் தெரிந்தன. இவற்றின் அடிப்படைகளே இன்று ஆயிரமாயிரம் உட்கொலைகளை உருவாக்கி ஈழப்போராட்டத்தில் இரத்தம் உறைந்த வரலாற்றை உருவாக்கும் என்று நாமெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை.
ஈழப் போராட்ட வரலாறு குறித்து வேறுபட்ட காலகட்டங்களில் வேறுபட்ட பிரசுரங்கள் வெளிவந்துள்ள போதிலும், அவை அனைத்தும் எதாவது ஒரு அரசியல் பின்புலத்தை நியாயப்படுத்தும் நோக்கிலேயே வெளிவந்துள்ளன. நான் சொல்லப் போவதெல்லாம் ஈழப் போராட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. ஏனைய அமைப்புக்களும் போராட்டங்களும் கூட இன்னொரு கோர வரலாற்ரைக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை நான் சாட்சியாக முன்மொழியத்தக்க அனைத்து அரசியல் நிகழ்வுகளையும், வரலாற்றையும் உண்மைச் சம்பங்களை முன்வைத்து எழுத்துருவாக்குவதை இன்றைய கடமையாக எண்ணுகிறேன். என்னோடு பங்களித்த ராகவன், குலம், கிருபாகரன்,கலாபதி உள்ளிட்ட அனைவரும் இது முழுமை பெறத் தமது பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
ஐயரின் வரலாறுச் சாட்சி ஒவ்வொரு வார இறுதியிலும் இனியொருவில் பதியப்படும்…

41 Comments
வாணி
Posted on 12/26/2009 at 12:46 pm
//1. இலங்கை அரசிற்கு எதிரான ஆயுதப் போராடம்.
2. தமிழீழம் கிடைத்த பின்னர் தான் இயக்கம் கலைக்கப்படும்.
3. இயக்கதில் இருப்பவர்கள் காதலிலோ பந்த பாசங்களிலோ ஈடுபடக்கூடாது.
4. இயகத்திலிருந்து விலகி வேறு அமைப்பில் இணைந்தாலோ, அல்லது வேறு அமைப்புக்களை ஆரம்பித்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.//தமது சுயநலலங்களுக்காக கொள்கைகள் காற்றில பறந்துள்ளன? ஆனால் பல அப்பாவிகள் மரண தண்டனைக்குள்ளாகி துரோகிகளாக செத்துப் போனார்கள். பல தலைவர்கள்இந்த மரண தண்டனையில் இருந்து எப்படித் தப்பினார்கள். தமக்கு ஒரு சட்டம். அடுத்தவருக்கு இன்னொரு சட்டமா?
Reply
sutha
Posted on 12/26/2009 at 3:21 pm
பிரபாகரன் செய்த துரோகத்தால் பல உயிர்கள் பலியாகியுள்ளது என்பது மட்டும் உண்மை
Reply
noyyalnathi
Posted on 12/29/2009 at 1:26 pm
உங்கள் கூற்றுப்படியே பிரபாகரன் அவருடைய வழி தவறு என்றே வைத்துக்கொள்வோம்… … அவரால்தான் இன்றைக்கு பல லட்சம் உயிர் நாசம் என்றேநம்புவோம்.. பிரபாகரன் இயக்கத்தை வலுப்படுத்தியபோது.. வலுவாய் இருக்கும்போது.. புலம்பெயர் தமிழர் பல்லாயிரம் இருக்கும்போது.. அவருடன் இருந்து பிரிந்தவர் பலர் வெளியேறியபோது யாரும் வாய் திறக்காதது ஏன்? இன்றைக்கும் கையாலாகாமல் இருப்பதும் ஏன்?அன்று பல பிரிவாய் இருந்த குழுக்கள் சிங்களனின் கைக்கூலியாய் இன்றுவரை கருணாக்களாய் இருப்பது ஏன்?
Reply
thurai
Posted on 01/14/2010 at 11:31 am
துரையப்பா ஒரு துரோகி. இன்று அரசுடன் உள்ள ஆயிரத்திற்கு மேலானோரும்துரரொகிகளா?
இந்த நிலைமைக்கு காரணம் புலியின் பயஙரவாதமே . இன்று உலகமேபயாஙரவாதிகளென தமிழரின் போராட்டத்தை நசுக்க காரணமும் புலிகளேயாகும்.
துரோகிகளை விட தமிழர்களிற்கு தீமையானது
புலியின் பயஙரவாதமே.
துரை
Reply
xxx
Posted on 01/14/2010 at 11:56 am
இந்தத் ‘தமிழ்த் துரோகிக்’ கதையைக் கொண்டு வந்ததே தமிழரசுக் கட்சி தான்.எத்தனை பேருக்குத் துரோகிப் பட்டம் கட்டினார்கள்.அடியெடுத்துக்க் கொடுத்தவர்களே அவர்கள் தான்.துரையப்பா கொலையை செல்வநாயகம் ஏன் கண்டிக்கவில்லை? அது தானா ‘ஈழத்துக் காந்தி’யாரின் சாத்வீகம்?
Reply
Segar
Posted on 03/03/2010 at 4:00 am
சொல்ல விடுங்கள். சொல்வதெல்லாம் தத்தமது தீர்மானகரமான கருத்துக்கு மாறாக அமைந்துவிடக்கூடாதென்ற பதபதைப்பில் சொல்ல முன்னரே வாய்ப்பூட்டுப் போட்டுவிடும் ஒரே பாரம்பரியம்தான் எமக்குத் தெரிந்ததோ? ஒருவர் – ஆரம்பம்முதல் அனுவங்களைக் கொண்டிருப்பவர் பேசுகிறாரென்றால் அதில் அறிந்துகொள்வதற்கு ஏதாவது இருக்கிறதாவென்று பார்ப்பதற்காவது அவரைப் பேச விடுங்கள். ஒன்றையுமே அறிந்து கொள்ளாதீர்கள், எல்லாம் ஏற்கெனவே உங்களுக்கு கூறப்பட்டுவிட்டன. காதுகளை – கண்களை – வாயைப் பொத்திக்கொண்டு இருக்கும்படி யாரையும் இனிமேலும் நிர்ப்பந்திக்க முனையாதீர்கள். சொல்லப்படுபவற்றிலிருந்து சரி எது பிழை எது என்று தீர்மானிக்க எமக்கு முடியும். எனவே சொல்ல விடுங்கள்!
Reply
meerabharathy
Posted on 12/26/2009 at 2:54 pm
ஐயர் அவர்களுக்கு நன்றிகள்…
நீங்கள் கூறுவது எந்தளவு உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது…ஆனால் இவ்வாறு ஆரம்பகாலத்திலிருந்து செயற்பட்டு இன்றுவரை அதிர்ஸ்டவசமாக வாழும் தங்களைப ;போன்று வாழும் ஒவ்வொரு செயற்பாட்டாளர்களும் போராளிகளும் தமது அனுபவங்களை வெளிப்படையாக முன்வைப்பது நல்லது…இது தமிழ் தேசிய போராட்ட வரலாற்றை அறிவதற்கு மட்டுமல்ல தவறுவகள் எங்கு எவ்வாறு ஏற்பட்டன என்பதை அறிவதற்கும் மேற்கொண்டு செயற்படுகின்றவர்களுக்கு ஒரு பாடமாகவும் இருக்கும் உங்களது இப்பணி முழுமைபெறும் என நம்புகின்றேன்…இதுபோன்று மற்றவர்களும் நமது அனுபவங்களை தொகுத்தது எழுதுவா;களாயின் பயனுள்ளதாக இருக்கும்….மேற்குறிப்பிட்ட பின்னுட்டம் போன்று உடனடியாக விமர்சனத் தாக்குதலில் இறங்காமல் அவ்வாறான மேன்போக்கான நான்கு “கொள்கைகளையும்” வகுப்பதற்கு என்ன காரணம்? அதற்கு மேல் அவா;கள் சிந்திக்காததற்கான மட்டுப்படுத்தல்கள் என்ன? என அதைப் பகுப்பாய்வு செய்வதுதான் நமது கடந்தகால தவறுகளை கண்டறிய உதவும்…முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஆரோக்கியமாக இருக்கட்டும்…மேலும் மற்றவர்களையும் எழுத தூண்டட்டும்….நம்பிக்கையுடன் செயற்படுவோம்….நட்புடன் மீராபாரதி
Reply
Jeevan
Posted on 12/26/2009 at 3:23 pm
மிகவும் நல்ல விடயம். தமிழர்களின் வரலாற்றில் நடைபெற்ற விடயங்களை ஆய்வுக்கண்ணேட்டத்துடன்நோக்குவதற்கான ஒரு பூரண விடயமாக இதைப் பதிவு செய்யுங்கள்.
இப்போது தேவைப்படுவது உண்மையின் தரிசனம். பொய்யும் புழுகும் தனிமனிதர்கள் சார்ந்த பிரச்சாரங்களும் அல்ல.
தொடருங்கள். துணிவுடன்.துணிவென்பது இங்கு நேர்மை.
Reply
visvan
Posted on 12/26/2009 at 4:41 pm
நல்லதொரு பதிவு. நேர்மையாகவும் உண்மையாகவும் அவர் மனம் திறப்பது தெரிகிறது. அவர் கோவிலில் பூசாரியாக இருந்ததற்காகவே அவர் ஒரு மார்க்ஸிய விரோதி திரிபுவாதி என்று திட்டித் தீர்க்கப் போகிறார்கள். அவற்றுக்கு அஞ்சாது ஐயர் தொடர வேண்டும் என்பது எமது அவா.
Reply
OpenTalk
Posted on 12/26/2009 at 7:21 pm
ஐயர் உங்களின் இம்முயற்சி மிகவும் வரவேற்க்கத்தக்கது. பாராட்டுக்கள்.
நீங்கள் ஆரம்பத்தில் மத்தியகுழுவினை உருவாக்கி அதில் சில திட்டங்களை முன்வைத்தாக எழுதியிருக்கிறீர்கள். அதில் நீங்களே தெரிவிக்கின்றீர்கள் “பருமட்டான திட்டம்” என்று. அன்றைய காலகட்டத்தில் இருந்த புறச் சூழ்நிலைகள் மற்றும் அனைவரும் ஒன்று திரண்ட நோக்கம் என்பன இந்தத் திட்டங்களில் பிரதிபலிக்கின்றன என்றே கூறமுடியும்.
இந்தத் திட்டங்களில் எவையும் தப்பானவையாக எனது கண்ணோட்டத்தில் படவில்லை. காதலில் ஈடுபடக்கூடாது, மரணதண்டனை வழங்குதல் என்பதுகூட அந்தக் காலப்பகுதியில் அல்லது அக் குழுவில் இருந்தவர்களின் மனநிலையில் நிச்சயமாகத் தேவைப்பட்ட ஒரு விடயமாக இருக்கலாம்.
இன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் இருக்கும் பல முக்கிய நிறுவனங்களில் வேலைக்குச் சேரும் போதுகூட தங்களுடைய நிறுவனத்தில் இருந்து விலகியபின் தாங்கள் செய்யும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களில் குறிப்பி்ட்ட காலத்திற்கு வேலைக்குச் சேரக்கூடாது எனக் கையொப்பம் வாங்குவது இன்றும் நடைமுறையில் உள்ளது.
இவ்வாறான நிலையில் ஓர் மூன்றாம் உலகநாட்டு வரிசையில் உள்ள ஓர் நாட்டில் அந்த நாட்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளிற்கு எதிராக உந்தப்பட்ட ஓர் இளைஞர் கூட்டம் தாங்கள் சந்தித்திருந்த காட்டிக்கொடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பழிவாங்கல்களில் இருந்து பெற்ற கசப்புணர்வுகளினால் மற்றும் பாசப்பிணைப்புகளால் ஏற்பட்ட இடையூறுகளால் இத்திட்டங்களை முன்வைத்ததில் என்பார்வையில் எத் தவறினையும் காணவில்லை.
இதில் குறிப்பாக நாம் ஒரு விடயத்தினையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அது எதுவெனில் காலவோட்டத்தில் சில திட்டங்கள் மாற்றம் பெற்றிருக்கின்றன.
ஒருசிலரில் ஏதோ ஒரு காரணத்தால் ஏற்படும் காழ்ப்புணர்வு அவர்கள் தொடர்பான எந்தவிடயத்தினையும் தவறான அல்லது வேண்டத்தகாத கண்ணோட்டத்தில் தான் பார்க்கவைககும் (இது எனக்குக் கூடப் பொருந்தும், இன்றும் ஒருவர் மீது அந்த நபரின் முதற்சந்திப்பில் ஏற்பட்ட ஒரு தவறான அபிப்பிராயம் இன்றும் நிலவுகின்றது).
Reply
Summa
Posted on 12/26/2009 at 11:50 pm
இன்பம் செல்வரத்தினம் கொலை வேடிக்கையானது. எனக்கு செல்வரத்தினத்தை நன்கு தெரியும் பழக்கமும் உண்டு. தெருச்சண்டித்தனமும் இரவில் ஊரில் உதவாக்கரையாகத் திரிந்த ஒருவர். இவரக்கு அரசியல் சுத்த சூனியம். உங்கள் புன்னலைக்கட்டுவனுக்குள் பிரபாவுடன் திரிந்தவர்களுள் நானுமொருவான். எமது சாட்சியம் ஒருபக்கச்சார்பாகத்தான் போகிறது. ஆனால் இது முறையாக இருக்கும் என்பது சந்தேகத்துக்குரியதே. சிவகுமாரன் பற்றிய செய்தியில் சிறு பிழை உள்ளது. பிரபாவுக்கு அமிரின் தொடர்வு இருந்தது இல்லை என்கிறீரா ஐயா?
Reply
s.kumaar
Posted on 12/27/2009 at 11:17 am
ஐயர் அவர்களே முதற்கண் தங்களின் ஆக்கம் ஆக்கபூர்வமானதாக’உண்மையின் தாக்கத்தை ஏந்தி வரும் என எண்ணுகின்றேன் .தாங்கள் அன்று எடுத்த இந்த முடிவுகள் அன்றைய காலகட்டத்தில் ஏற்புடையதே தவறில்லை.கால ஓட்டத்தில் வரலாற்றின் புறநிலைத் தாக்கங்கள் இன்றைய பின்னடைவிற்கு மூலமாகின்றது.என்னதான் வரலாற்றை நீங்கள் எழுத முனைந்தாலும் கடந்த கால தலைவன் வரலாபற்றில் கறை வடிக்க முனைவதை தவிர்க்கவும்.இறந்த காலங்கள் ஒன்றும் நிகழும் காலங்களால் தீர்ப்பெழுதுதல் நடைமுறைக்கு அப்பாற் பட்டது.ஒவ்வொரு காலாட்டத்திலும் அதன் அசைவுகள் அன்றைய நிலையில் அவசியமானதே.நோக்கம் இலங்கலை இழிவுபடுத்தாமல் இவையாவும் இணையட்டும்.தயவு செய்து ஊகங்கள்:கற்பனைகள் தவிர்த்து சத்தியங்களை தகவலாக்க எங்கள் வேண்டதலாக—நன்றி தொடரட்டும்.
Reply
praba
Posted on 12/27/2009 at 11:02 am
உங்கள்இனியொரு இணையம் மாற்று அரசியலுக்கான வெளியாக தெரிகிறது.உரையாடல் வெளி யாக தெரியவில்லை.ஒரே குறிப்பிட்ட அரசியல் கருத்தை (கட்டுரைகளை )வெளியிட்டுக்கொண்டு அதன் மீது மட்டுமே விவாதம் வைக்கும் நீங்கள் ஒன்று உரையாடல் வெளி என்பதை எடுத்துவிடுங்கள்.அல்லது எல்லா மாற்று கருத்துள்ள கட்டுரைகளையும் வெளியிடுங்கள்.பிரபாகரனை பாசிஸ்ட் என்று சொல்லும் உங்களிடம் ‘மற்றவர் கருத்தை நாங்கள் வெளியிட்டு விவாதிக்க மாட்டோம்;எங்கள் கருத்தையே வெளியிட்டு மற்றவர்கள் விவாதிக்க வேண்டும்’ என்ற பாசிசக்கூறு இல்லையா? எனவே ‘உரையாடல்’ என்ற வார்த்தையை எடுத்துவிடுவது இம்முரன்பாட்டை நீக்கிவிடும்.ஆணித்தரமாக முடிவுகளை வைத்துக்கொண்டு விவாதம் என்பது இடதுசாரி வரட்டுக்கலாச்சாரம்.-பிரபாகரன்.
Reply
proffessor
Posted on 12/27/2009 at 11:56 am
ஜயர் அவர்களுக்கு மிக்க நன்றியுள்ளவர்களாக ஈழப்போராட்ட வரலாற்றினை பதிபவர்கள் இருப்பார்கள் என கருதுகிறேன். இவ்வளவு கால மெளனத்துக்கு பின்னர் உங்கள் பதிவு நேர்மையாக எல்லா இடத்திலும் நான் இருந்ததாக சுயதம்பட்டம் அடிக்காமல் இந்த பதிவு இருக்கவேண்டும்.
இப்போதுள்ள புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால வரலாறு தெரிந்த இருவரில் தாங்களும் பேபி சுப்பிரமணியமும் தான் உயிருடன் இருக்கிறீர்கள். அதில் பேபியின் னிலை தெரியாது.
உங்களிடம் சில கேள்விகள் முதல் பதிவுக்கானது1.சின்னராசு என்பவர் ஜெலோவா? 2. மத்திய குழுவில் இடம்பெற்றவர்களின் தனிப்பட்ட செயற்பாடுகள் என்ன ? இந்த மத்திய குழுவுக்கு வெளியில் யார் யாரெல்லாம் இயக்கத்தில் எத்தனை பேர் இருந்தார்கள்? மத்திய குழுவை யார் முடிவெடுத்தார்கள்?3. முதல் பதிவில் இடம்பெற்ற காலப்பகுதியில் பேபி சுப்பிரமணியம் போன்றவர்கள் அமைப்பில் இருந்தார?
4.பற்குணம் கொலை தொடர்பான உங்களுக்கு தெரிந்த விடயத்தை சொல்லவேண்டும்.
5.செட்டியுடன் ஆரம்பத்தில் இருந்த இரத்தினகுமார் இன்னமும் உயிருடன் தான் உள்ளார். கண்ணாடி பத்ம னாதன் கொலை என்ன நடந்தது? இவற்றுக்கு ஜயரிடமிருந்து பதில்களை இனியொரு பெற்றுக்கொள்ளவும்.
Reply
thotta
Posted on 12/27/2009 at 12:31 pm

Play AudioComment »

Reply
Kishi
Posted on 12/27/2009 at 7:56 pm
யாரிவர்?மீளவும் புலித்தனமாய்க் கட்டளையிட?…அவரவர் தம் நிலையறிந்து தமக்கிசைவாய்ச் சொல்தென்ன வரலாறு?உன்னைப் பின்தள்ளி உலகை அதன் வடிவில் சொல்லுதற்கு நீ கட்டடையிட>உனதும்-எனதும் அல்ல வரலாறு.பெருந்திரள் மக்கள்தம் உயிர்குண்டு வினைசெய்தவர்கள் எவரும் மக்கள்தம் வலியை அறியாரென்பது இவ்வொலியூடாய் வந்த மனிதரிடம் மண்டிக்கிடக்கிறதெனக்கொண்டால் கொலையா விழும்?
Reply
THOTTA
Posted on 01/10/2010 at 2:13 pm
என்ன சொன்னீர்..அன்பரே.அவரவர்..தம் வாய்க்கு வந்த படி சொல்வதில்லை வரலாறில்லை எண்டா……..வரலாறு வெற்றி பெற்றவர்கழாலேயே…எழுதப்படுகிறது….அதனால்தான்..மகாவம்சத்தில்…தமிழர்கழ் வந்து-ஏறு குடிகழ் என்று எழுதி விட்டார்கழே….தலைவர் பிரபாகரன்..சொல்வார்..வென்றால் சரித்திரம்….தோத்தால் சம்பவம் எண்டு…புலிகழ் வென்ற போது எல்லாம் , தமிழர் வென்றதாய்..கொண்டாடியவர்கழ்…( ஜெய்சுக்குறு..ஓயாதாலைகழ் )..அவெர்கள் தோத்தபோது மட்டும்…அது அவர்கழின் தோல்வியாக்கிவிடுகிறிர்களே…தலைவர் பிரபாகரன்..தன் சொந்த மக்கழை வைத்து..தம் சொந்த விடுதலைக்காவே போராடினார்….ஆனால் அவர் துரோகி. அலெக்சாந்தர். நெப்போலிய்ன்..தம் சொந்த மக்கழை வைத்து வேறு நாடு பிடிக்க போய்…தன் வீரர்கழையும் கொன்று..வேறுநாட்டு மக்கழயும் கொன்ரார்கழே…ஆனால் அவெர்கழ் எல்லாம்..மகா வீரர்கழ் ஆகி விட்டார்கழே…இப்பொ சொல்லும் வரலாறய்.. யார் எழுதுகின்ரார்கழ் எண்டு..
Reply
ehtiri
Posted on 01/10/2010 at 2:28 pm
தோழா..தோட்டா வெற்றி பெற்றவர்களாலே வரலாறு வாய்க்கு வந்த படி எழுதப்படுகிறது அவ்ழோ தாண்டா…
Reply
thass
Posted on 01/10/2010 at 2:41 pm
தோட்டா, அப்போ நீர் சொல்கிற படி பார்த்தால்.. நாலுபேரைப் போட்டுத் தள்ளி காட்டிக்கொடுத்தால் தான் தியாகி ஆகலாம் போல.. ம்ம்… நடக்கட்டு நடகாட்டு..
thotta
Posted on 12/27/2009 at 1:13 pm
சுதா , தலைவர் செய்தது எல்லாம் கொலை என்டால்…பன்டாரவன்னியன் ,கட்டெபொம்மன், எல்லாழன் , இவர்கழ் காலதிலும்..காட்டிக் கொடுபவர்கழ் இருந்திருகிரர்கழ்.. அப்போதும் கொலைகழ்நடந்து இருந்திருகின்ரன….அப்பொ , அவெர்கழ்…..மட்டும் வீரபுருசர்கழா..?எல்லா இயக்கங்கலையும் , புலிகழ் அழிதார்கழ் என்டு சொன்னால்…ஏன்…. நீங்கழ் எல்லாம் ஒன்டு சேர்ந்து புலிகழை அழீத்து இருக்கலாம் தானெ…ஏன் செய்யவில்லை…… போராட்டம் என்ன விழையாட்டுப் போட்டியா…இந்த தடவ தோத்தா…அடுத்த தடவ வெல்ல…….புலிகழை சிஙகலவ்ன் வெல்லவில்லை……உலக நாடுகலெ அவெர்கழை போரீட்டு வென்ரது…….சுதா…உதவி வேனாம்——உபத்திரவம் சய்யாதே…..தமிழா. நீ போராடாடிய்யிம் அழிவாய்…….போராடினலும் அழிவாய்….ஆனால் போரடினால் தப்ப….வழி இருக்கும்
Reply
guru'radhakrishnan
Posted on 12/27/2009 at 1:18 pm
பற்குண்ம் கொலை தொடர்பான உஙகளது விரிவான விடயத்தை விலக்கமாக சொன்னால்நல்ல்து எனநினைக்கிறென்.
Reply
Ceylon Vasanthy
Posted on 12/27/2009 at 6:02 pm
ஜயர் அவர்களுக்கு:இதில் தாங்கள் குறிப்பி்ட்ட அனைவரதும் வியாபார அனுகூலம் அனைத்தையும் அறிந்தவள் நான்.சிலோன் வசந்தி
Reply
mukilvannan
Posted on 12/28/2009 at 10:30 am
வரலார்ரு என்பது எஅல்லுதப் படுவதிலலி அது உருவக்க படுவது.சரிதிரஙல் சகதவதை.இபொதுநப்கல் எதை பெசினலும் அன்ரு ஒரு எலுஷி எட்பட யார் கரனம்.இனி ஒரு காலம் என்பதெய் ஒரு கனவு.பிரபாகரன் ஒரு விதை அவரெ ஒரு விருட்சம்.
Reply
venkattan
Posted on 12/30/2009 at 7:14 am
ஹிரோ என்று தொடங்கினால் தான் வாசிப்பர்வகள் அதிகம் வருகார்கள் என்று தமிழரங்கம் முறையில் தொடங்கி கடைசியல் சகோதரயுத்தத்திற்கு பிரபாகரன் தான் காரணம் என்ற உங்களின் ஏவல் பூதங்களின் குரலையும் ஒலித்துவிட்டிர்கள். எதிரொலியாக நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள் என்று வேறு பக்கபாட்டு.. நடக்கட்டும்..அது சரி புலிகளை விட 1000 மடங்கு கொலைசெய்த இந்தியாவைாய இலங்கையோ உங்களில் ஏன் குற்றம் சாட்ட முடியாது? எஜமானர்கள் மீது மரியாதையா? எனினும் சொல்லாமல் ஒன்றை சொல்லிவிட்டிர்கள். இன்னும் புலிகள் தலைவர் பெயரை புலிகளை வதை்து தலையங்கம் எழுதினால் தான் உங்கள் இணையத்தளமும் உங்களைப்போன்ற பலரது இனணயங்களும் வருகைகளை பெற்றுக்கொள்கின்றன.. 2 பக்க வருமானம் இன்னும் புலிகளால் தான். நக்கிறதுக்கும் காசு. வாலாட்டுறதுக்கும் காசு. குலைத்துவிட்டு அதற்கும் காசு….அது சரி போராட்ட்ம் என்று வெளிகிட்டு இன்று என்னவோ செய்து கொண்டிருக்கம் காண்டிபனை உங்களால் ஏன் குறை சொல்ல முடியாது உள்ளது.. புலிகள் சகோதர யுத்தம் செய்தார்கள் என்று கத்தும் உங்களால் ஏன் புலி தலைவரை அழிக்க பல்லாயிரக்கனக்கான உங்கள் சகோதரர்களை கொன்றதை குற்றம் கூறமுடியாது உள்ளது? இதுவும் பல மடங்கு சகோதர கொலைகளுக்க சமமானதே…இந்த மக்களின் குருதியில் வாழும் உங்களைப்போன்றவர்களுக்கு இதல்லாம் சாதாரணம் தான்.. ஆனை இருந்தாலும் காசு. இறந்தாலும் காசு… பிழைத்துக்கொள்ளுங்கள்….
Reply
venkattan
Posted on 12/30/2009 at 7:16 am
மற்றொன்று… உங்கள் பதிவில் நீங்கள் எங்கு உங்கள் தலையங்கத்தை பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று கோடிடட்டு காட்டுங்கள்.. மற்றும் படி எழுதிவிட்டு படிபவர்களுக்காக தலைப்பை போடும் கீழ்த்தரமான பத்திரிகை தர்மம் தான் உங்களது தொழில்..பிராமணீயத்தை வெறுத்த நீங்க்ள ஏன் ஐயா ஐயர் என்ற அந்த சமூகத்தின் அடையாளத்தை மட்டும் மாற்றவில்லை???
Reply
போராட்டம்
Posted on 12/30/2009 at 8:48 am
//பிராமணீயத்தை வெறுத்த நீங்க்ள ஏன் ஐயா ஐயர் என்ற அந்த சமூகத்தின் அடையாளத்தை மட்டும் மாற்றவில்லை???//
இக்கேள்விக்கு பதிலளிப்பீர்களா?
Reply
Shan Nalliah gandhiyist norway
Posted on 12/30/2009 at 9:57 am
It is very mportant to tell all experiences with honest,neutrality! So we can learn mistakes from the past!We shd form the right path based on Mahathma Gandhi’s principles! Still we can achieve our goals by political tactics,diplomatic moves as well as manipulating geo-political-economic situations!YES WE CAN!!!
Reply
venkattan
Posted on 12/31/2009 at 1:26 pm
Mahathma Gandhi’s principles???? he decided the death date of bagath singh… still ur in the hallucination created by indian gandhi family…
Reply
Raghavan-Canada
Posted on 01/02/2010 at 8:26 pm
தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் தமிழீழ விடுதலைக்கழகத்தின் ஆரம்பகால தமிழீழ தேசிய விடுதலைப்போராளி, புதிய பாதை ஆசிரியர் சுந்தரம் என்கின்ற சிவசண்முகமூர்த்தி தமிழீழ விடுதலைப்புலிகளால் 02-01-1982 இல் இவர் கொலைசெய்யப்பட முன்னர், பற்குணம் மற்றும் மைக்கேல் போன்றவர்கள் தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்ன் ஆரம்பகால தலைமறைவுச்சூழலில் கொல்லப்பட்டாலும் சுந்தரத்தின் கொலையின் பின்னரே இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கெரான போராட்டம் ஆயுதப்போராட்டமாக பரிணமிக்கும்பொழுதே மாற்றுக்கருத்துக்க� ��ண்ட ஏனைய தமிழ் தேசிய விடுதலையியக்கத்தின அழித்தொழித்தல் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூலாதாரக்கொள்கைகளி ஒன்றாகிவிட்ட புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பித்தது. 1ஒடுக்கப்படும் இனத்தின் சார்பாக போராட முன்வருபவர்கள் ஒரே சமூக அடித்தளத்தைக் கொண்டவர்களல்ல வெவேறான வர்க்கத்தினராய் வெவேறான வர்க்கப்பார்வையுடைர்களாக இருக்கலாம். இவ்வாறானவர்களை ஐக்கியப்படுத்தி தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத் முன்னெடுப்பதற்கு பதிலாக, ஓர் இயக்கம், ஒரு தலைவன் என்ற சர்வாதிகார முழக்கத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கையெனப்பிரகடனம செய்து சுந்தரத்திலிருந்து அமுல்படுத்தி வருகின்றனர். தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்னை வெறுமனே சிங்கள பௌத்த இனவாதப்பிடியிலிருநது இலங்கையின் வடக்கு, கிழக்கு நிலப்பரப்பில் வாழும் மக்களின் அதிகாரத்தை தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ விடுதலைப்புலிகள்மாதிரமே கைப்பற்றவேண்டுமென்று குறுக்கினர்.
ஒடுக்குமுறையொன்றின எதித்துப் போராடும் ஓர் இயக்கம், அதே ஒடுக்குமுறையினை எதித்து போராடும் இன்னோர் இயக்கமொன்றின் போராளிகளைக் கொலைசெய்வதென்பதை எல்லாவழிமுறைகளைகளைம் கையாண்டு எதிர்க்கப்படவேண்டுன்பதை 1982களில் தமிழீழ தேசிய விடுதலைப்போராட்டத்ல் முனைப்பாக செயற்பட்ட பெரும்பாலான தேசிய விடுதலை இயக்கங்களும், தமிழ் பேசும் மக்களும் உணரத்தவறிவிட்டனர். இந்தத்தவறுதான் இறைகுமாரன், உமைகுமாரன், ஒபராய் தேவன், ஜெகன், மனோ மாஸடர் 1986இல் தமிழீழ விடுதலையியக்கத்தின 300 போராளிகள் அதன் பின்னர்; அனைத்து அமைப்புகளின் போராளிகளின் கொலைகளுக்கு வித்திட்டது. இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் ஒரு பாசிச அமைப்பாக உருவாக வழிவகுத்தமைக்கு இந்தத்தவறு மிகமுக்கியமான காரணங்களிலொன்றாக அமைந்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அராஜகங்களை வன்மையாக எதிர்த்துப்போராடவேண்டுமென்ற எண்ணங்கொண்டவர்கள், 24 வருடங்களின் பின்னராவது இந்தத்தவறினை முற்றுமுழுதாக உணர்ந்து கொண்டவர்களாகவும் இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் என்பது ஒரு மக்கள் விரோத அமைப்பென்ற திட்டவட்டமான கருத்து இன்னமும் தமிழ் பேசும் மக்களிடையே ஆழமாக வேரூன்றவில்லை. இதனால்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் பல ஆயிரக்கணக்கான ஏனைய இயக்க தமிழ்ப்போராளிகளை, ஆதரவாளர்களை சமூக விரோதிகளென்றும் அரசாங்க துணைப்படையினரென்று கொன்றுகுவித்தும் தமிழ் பேசும் மக்களால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்படாதவர� ��களாக இருக்கிறார்கள்.
இலங்கை இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்தினால் கொல்லப்பட்ட தமிழ் பேசும் மக்களை பட்டியற்படுத்தும் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பு அமைப்புகள், தமிழீழ விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்களின எண்ணிக்கைபற்றி வாய்திறந்தும் கதைப்பதில்லை. இதற்கு அச்சம் ஒரு காரணமாக இருக்கலாம். பலவிதமான அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய இந்த இக்கட்டான காலகட்டத்தில், ஜனநாயக சக்திகள் தமிழீழ விடுதலைப்புலிகளாலும் ஏனைய இயக்கங்களாலும் கொல்லப்பட்ட தமிழ் பேசும் மக்களின் விபரங்களை துல்லியமாக சேகரிப்பதிலும் முழுக்கவனம் செலுத்தவேண்டும்.
Reply
Soorya
Posted on 02/05/2010 at 7:19 pm
தமிழருக்கு ஜனநாயகம் விடுதலை கிடைக்குமட்டும் சரிவராது என்பதை புலிகள் தாம் பட்ட அனுபவத்தால் கண்டுகொண்டதன் விளைவு அவர்கள் பின்பு எடுத்த பல முடிவுகளுக்கு காரணமாய் இருக்கலாம். புலிகள் இல்லையென்றவுடன் காளான்கள் போன்று பல பணம் பண்ணும் ஜனநாயகவாதிகள் புறப்பட்டு விட்டார்கள். இவர்கள் இப்போது செய்வது புலிகள் இன்றுவரை காத்துவந்த தமிழரின் ஒற்றுமையை உடைப்பதும் அழிப்பதுவும்தான்.
புலிகள் கொலை செய்தார்கள் என்றால் பட்டியல் போடுங்கள், அதை விவாதத்திற்கு விடுங்கள். அதுபோல் சகல தமிழ் இயக்கங்களும் செய்த கொலைகளை பட்டியல்போட்டு உண்மையில் என்ன நடந்தது என மக்களுக்கு தெரியப் பண்ணவேண்டும். இதை விடுத்தது புலிகள் கொன்றார்கள், புலிகள் பாசிச வாதிகள் என்று தொடர்ந்து கத்திகொன்று இருந்தால் மக்களுக்கு இன்னமும் குழப்பமாகத்தான் இருக்கும்.
Reply
thamilmaran
Posted on 02/05/2010 at 8:22 pm
சூர்யா, ஒவ்வொரு பக்கமும் கூடைகலை தள்ளீக் கொண்டெ போனால் குப்பைகள் விழ வேண்டிய இடத்தில் விழாது.உங்களூக்குத் தெரியாது மாத்தையாவும் அவரது தோழர்களூம் கொல்லப் பட்டது. காட்டிக் கொடுத்தார்கள் என்றூ காரணமே சொல்லப்பட்டது.தலைவர் பாலசிங்கம் அவர்க்லை கோணர் பண்ணவே கருணாவை வெளீயே கொண்டு வந்தார்.இப்படி ஒவ்வொன்றூம் அவரது தாழ்வுச் சிக்கல்களால் ஏற்பட்ட சிக்கல்களே.
Reply
Soorya
Posted on 02/05/2010 at 9:36 pm
அன்பின் தமிழ்மாறன்,கூட இருந்து பார்த்ததுபோல் எழுதுகிறீர்கள். உங்களுக்கு வதந்திமன்னன் எனப் பேர் வைத்தால் நல்லாயிருக்கும். தொடரட்டும் உங்கள் சளைக்காத பணி.
Reply
Sunthar
Posted on 01/02/2010 at 10:03 pm
ராகவன் அவர்களே சுந்தரத்தின் படுகொலையை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்கின்றீர்களா?
Reply
Sithisri
Posted on 01/03/2010 at 7:54 am
இனியொரு! உங்களுக்கு உவப்பில்லாதவறறை தணிக்கை செய்வதன்மூலம் மீண்டும் மீண்டும் தவறிழைக்கிறீர்கள். பாவம் மக்கள். அவர்களை வாழவிடுங்கள்!
Reply
venkattan
Posted on 01/03/2010 at 8:29 am
ராகவன். நீங்கள் சொல்வதற்கும் கருணாநிதி சொன்தற்கும் 6 வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்.. அது சரி… புலிகளால் கொல்லாமல் தப்பித்த டக்ளஸ் தேவனந்தாவோ மீதியாருமொ என் இன்னும் ஈழத்திற்காக ஒரு மயிரைக்கூட சிரைக்க வில்லை.. நீங்கள் புலிகள் மீது சொல்லும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் சரியாகவே இருக்கட்டும்.. இதுவரை காலமும் எங்கிருந்தீர்கள்…. எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை… புலிகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் யாரும் இந்தியாவை குற்றம் சாட்டுவதில்லை. அவர்கள் சாட்டும் குற்றச்சாட்டுக்க்ள வித்தியாசப்படுவதில்லை.. ஒரே மாதிரியானவை… உங்கள் எஜமமார்களை திருந்தசொல்லுங்கள். ஒரே மாதிரி வாலாட்டினாலும் வித்தியாசமாக குலைக்க கற்றுக்கொள்ளுங்கள்.. விடுதலைப்புலிகளுக்கு எதிராக கிளர்ந்ததெளுங்த உங்களுக்கு அவர்களைவிட 1000 அநியாயம் செய்த இந்தியாவிற்க எதிராகவே அல்லது உங்களைமாதி வாலாட்டி குலைக்காமல் தமிழ் மக்களை கடித்துகுதறிக்கொண்டிருக்கும் சிறிலங்கா அரசுக்காக உங்கள் குரல் ஒர வர்த்தையேதும் உதிர்காதது ஏன்??மீண்டும் அண்மையில் நான் ரசித்த ஒரு ஆசிரியபந்தி…/////……எங்கட மொழியில் சொன்னா அண்ணன் இப்ப திண்ணையில இல்லை. சும்மா கிடக்கிற அந்தத் திண்ணையில் இப்ப எல்லோரும் கூடிப்பேசுகினம். கூட்டங்கள் போடுகினம். அயலில மாநாடு வச்சு ஒரு பகுதி தன்ர உலகத் தலைமையை உறுதி செய்ய முயலுது. இன்னொரு பக்கத்தில் எல்லாத் தலையளையும் ஒண்டாக்கி யாரோ மிளகாய் அரைக்கினம். என்னத்தைச் சொன்னாலும் உரியவன் இல்லையெண்டால் எல்லாம் ஒரு முழம் கட்டைதான்……///
வெளிநாடுகளில் கொடி பிடித்து மக்களுக்காக ஆர்பாட்டம் செய்யும் தமிழர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு கத்துகிறார்கள் என்று சொல்லும் யாரும் உங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதி்ல்லை…
ஆனால் என்னதான் உங்கள் மனது கல்லாயிருந்தாலும் மனச்சாட்சி என்று உங்களுக்கு இருந்ததால்… இந்த கேள்வி ஐயரையும் உங்களையம் ஒரு கணம் யோசிக்க வைக்கும்…வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல உங்கள் பதிவுகளில் நீ்ங்கள் பிளைப்பதற்காக எழுதப்படும் ஒருவர் இன்றுவரை ஏன் உங்களைப்பற்றி ஒரு வரியேனும் குற்றம் சாட்டவில்லை….அவர் மாவீரன் மட்டுமல்ல.. நல்ல மனிதர் கூட.. அதனால் தான் அவர் ஈழத்தை இந்தியாவிற்கு எதிராக அண்டைநாடுகளுக்கு விற்ற வில்லை. அப்படி நடந்திருநதால் அவர் வெற்றிபெற்றிருப்பார். அவர் அப்படி செய்ய மாட்டார் என்று அவரை நன்றாக அறிந்ததிருநதவர்க்ள. இந்திய ஆளும் அதிகார வர்க்கம்.மீண்டும் ஒரு பழைய பல்லவி..நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன..
Reply
shanthan
Posted on 01/24/2010 at 7:45 pm
எதிரி இன்பவன் அப்படித்தான் இருப்பான். எதிரி என்பவன் உங்களுக்கு கேக்கும் பிஸ்கற்றும் தீத்திவிட மாட்டான். எதிரியின் குணம் எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனபடியால் நாங்கள் எதிரியை குற்றம் சொல்ல வேண்டியதில்லை.இந்தியாவை நீங்கள் எப்போதோ ( போதியளவு வயிறு வளர்த்தபின்) எதிரியாக பிரகடனப்படுத்தி விட்டீர்கள்.ஆனால் புலிகளோ தமிழர்களுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு தமிழர்களை வேட்டையாடிய ஒரு பாசிச அமைப்பு. அவர்கள் ஏனைய இயக்கப் போராளிகளை மட்டும் கொல்லவில்லை. அப்பாவிப் பொதுமக்களையும் கொன்றார்கள்.புலிகள் ஏனைய இயக்கப்போராளிகள் மீதான தாக்குதல்களை ஆரம்பித்தபின் தமது உயிரைப்பற்றி கவலை கொள்ள ஆரம்பித்தார்கள்.ஆகவே புலிகளால் எந்த ஜனநாயக ரீதியான தீர்வையும் ஏற்க முடியவில்லை. அப்படி ஏற்றிருந்தால் தாங்கள் கட்ந்த காலங்களில் செய்த குற்றங்களுக்கு சந்தியில் வைத்து அடித்துக் கொல்லப்படுவார்கள் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது. ஆனபடியால் அவர்கள் மேலும் மேலும் பாசிசத்தியே நாடினார்கள்.
Reply
jagan
Posted on 01/04/2010 at 1:01 am
Hi Mr.Sunmukam anni, iyaevery thing is ok for a while but please take your time to consult more people to collect more information or for any doubt that you have or say that’s all I knew , which is ypur part of the story.thanks well done , please go on .
Reply
EATHIRVU
Posted on 01/06/2010 at 2:03 pm
குலம்,ஐயர்,ராகவன் தவறிப் போய்,தப்பிப் பிழைத்த புன்னாலைக்கட்டுவன் மும்மூர்த்திகள்.முதல்வர் புலி ஆதரவாளராகவும்,மற்ற இருவரும் புலி எதிர்ப்பாளர்களாக செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள். இக்கட்டுரையில் குலத்தின் படம் விடுபட்டுப் போனதில் நியாயம் இருக்கும்.போடப்பட்ட ஆயுதம் தாங்கிய பிரபாகரனின் படம் எடுக்கப்பட்ட போது ஐயர் புலி இயக்கத்தில் இல்லை.இது எவ்வாறு சாத்தியம் ஆகும்? இது கட்டுரையை மெருகேற்றுகிறவர்களின் தவறா? அல்லது இன்னொருவரும் வரைதலில் ஈடுபட்டுள்ளாரா?
Reply
shanthan
Posted on 01/24/2010 at 8:03 pm
ஐயரும் ராகவனும் காலப்போக்கில் யதார்த்தத்தை உணர்ந்து திருந்திவிட்டார்கள். குலம் சுவிஸில் தமிழ்மக்களிடம் அறவிடும் கப்பத்தில் நல்லவசதியாக வாழ்கின்றார். தனது சகோதரங்களையும் வெளிநாட்டிற்க்கு கூப்பிட்டு விட்டார்.ஐயரும் ராகவனும் திருந்தினாலும் இன்னும் மக்களிடம் மன்னிப்பு கோராமல் மாபெரும் தவறு செய்கின்றார்கள்.நீங்கள் மன்னிப்பு கோராதவரை உங்கள் கட்டுரை உண்மையாக இருந்தாலும் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகவே இருக்கும்.
Reply
venkatesh
Posted on 01/08/2010 at 7:33 am
பிரபாகரனை குறை கூறுபவர்கள் காணாமல் போவார்கள்,மாவீரன் பிரபாகரன் புகழ் உலக் உள்ள வரை தமிழன் உள்ள வரை நிலைத்திருக்கும்,.
புலிகள் மீண்டும் எழுவார்கள்,போராடுவார்கள்,தமிழ் ஈழமே இலட்சியம்.,அதை அடைந்த தீருவார்கள்,எந்த போராட்டமும் இலட்சியத்தை அடையாமல் முடிந்ததில்லை.போராட்ட முறை மாறலாம்,கால நீட்டிப்பு ஆகலாம்,.ஆனால் போராட்டம் அதன் இலக்கை அடையும் வரை வோயாது.
Reply
கீரன்
Posted on 02/11/2010 at 3:39 pm
எதிரியோடு ஆயுதம் ஏந்தி போராடும் ஒரு இயக்கம் துரோகிகளைக் களையெடுப்பது கட்டாய தேவை. புலிகளைக் கொன்றவர்கள் கொல்ல நினைத்தவர்கள் கொல்லப்பட்டார்கள். அதுதான் உண்மை. எனது ஆதங்கம் வி.புலிகள் எல்லாத் துரோகிகளையும் களையெடுக்கத் தவறியதுதான். கருணா, தேவானந்தா ஆகயோரை நேரகாலத்தோடு கயையெடு்த்திருக்க வேண்டும். அதில்தான் “பாசீச” புலிகள் தவறு செய்து விட்டடார்கள். பிராபகரன் ஒருவரே ஒரு இராணுவ கடடமைபை உருவாக்கி எதிரி மீது ஒரு மரபு அடிப்படையிலான போரை மேற்கொண்டார். மற்ற இயக்கங்கள் சிங்கள -பவுத்த வெறியர்களுக்கு சேவகம் செய்து தங்கள் வயிற்றை வளர்த்துக் கொண்டார்கள். எந்த நாய் எப்படிக் குரைத்தாலும் தமிழர் வரலாற்றில் வீரத்தின் இலக்கணமாக விளங்கிய தலைவர் பிரபாகரனின் புகழை ஒரு இம்மியளவும் குறைக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக